ரஷ்யாவில் விமான விபத்தில் 15 பேர் காயம்
ரஷ்யாவில் விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் 15 பேர் காயமடைந்தனர்.
ரஷ்யாவில் பயணிகள் விமானம் ஒன்று பிலாகோ வெவ் சென்ஸ்க் விமான நிலையத்தில் நேற்று காலை தரை இறங்கியது. அப்போது காற்றுடன் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் ஓடுதளத்தில் இறங்கிய விமானம் தாறு மாறாக சறுக்கி 200 மீட்டர் தூரம் ஓடி விபத்துக்குள்ளாது. அதில் விமானத்தின் இறக்கைகள் உடைந்தன. அந்த விமானத்தில் 36 பயணிகள் இருந்தனர். அவர்களில் 15 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 7 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ரஷ்யாவில் விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் 15 பேர் காயமடைந்தனர்.
ரஷ்யாவில் பயணிகள் விமானம் ஒன்று பிலாகோ வெவ் சென்ஸ்க் விமான நிலையத்தில் நேற்று காலை தரை இறங்கியது. அப்போது காற்றுடன் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் ஓடுதளத்தில் இறங்கிய விமானம் தாறு மாறாக சறுக்கி 200 மீட்டர் தூரம் ஓடி விபத்துக்குள்ளாது. அதில் விமானத்தின் இறக்கைகள் உடைந்தன. அந்த விமானத்தில் 36 பயணிகள் இருந்தனர். அவர்களில் 15 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 7 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.