கிறீஸ் மர்ம மனிதர்கள்
நாட்டின் பல பிரதேசங்களில் தற்போது பொதுமக்களை அச்சுறுத்திவரும் கிறீஸ் மர்ம மனிதர்களின் நடவடிக்கைகள் ராஜபக்ஷர்களின் திட்டத்திற்கமைய முன்னெடுக்கப்டுவதாக ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களை அச்சுறுத்திவரும் இந்த மர்ம மனிதர்கள் ராஜபக்ஷவின் சகாக்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிறீஸ் மர்ம மனிதர்களின் மூலம் மக்களை அச்சுறுத்தி துட்டகைமுனுவின் வாள் தேடப்படுவதாகவும் விஜித்த ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
துட்டகைமுனுவின் வாள் கிடைத்தால், அது நீண்டகாலம் அதிகாரத்தில் இருப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் இதனால் அந்த வாளை தேடுவதற்காக ஜனாதிபதி ராஜபக்ஷவின் சகாக்களின் குழுவொன்று கிறீஸ் மர்ம மனிதர்களாக மக்களை பயமுறுத்துகின்றனர் எனவும் விஜித்த ஹேரத் குற்றஞ்சுமத்தினார்.
இதனிடையே மஹியங்கனை பிரதேசத்திற்கு அண்மித்த நாகதீப வாவியில் துட்டகைமுனுவின் வாளைத் தேடும் பாரிய தேடுதல் பணியொன்று தற்போது முன்னெடுக்கப்படுவதாகவும் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
நாட்டின் பல பிரதேசங்களில் தற்போது பொதுமக்களை அச்சுறுத்திவரும் கிறீஸ் மர்ம மனிதர்களின் நடவடிக்கைகள் ராஜபக்ஷர்களின் திட்டத்திற்கமைய முன்னெடுக்கப்டுவதாக ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களை அச்சுறுத்திவரும் இந்த மர்ம மனிதர்கள் ராஜபக்ஷவின் சகாக்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிறீஸ் மர்ம மனிதர்களின் மூலம் மக்களை அச்சுறுத்தி துட்டகைமுனுவின் வாள் தேடப்படுவதாகவும் விஜித்த ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
துட்டகைமுனுவின் வாள் கிடைத்தால், அது நீண்டகாலம் அதிகாரத்தில் இருப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் இதனால் அந்த வாளை தேடுவதற்காக ஜனாதிபதி ராஜபக்ஷவின் சகாக்களின் குழுவொன்று கிறீஸ் மர்ம மனிதர்களாக மக்களை பயமுறுத்துகின்றனர் எனவும் விஜித்த ஹேரத் குற்றஞ்சுமத்தினார்.
இதனிடையே மஹியங்கனை பிரதேசத்திற்கு அண்மித்த நாகதீப வாவியில் துட்டகைமுனுவின் வாளைத் தேடும் பாரிய தேடுதல் பணியொன்று தற்போது முன்னெடுக்கப்படுவதாகவும் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.