லண்டன் கலவரம் மேலும் 3 நகரங்களுக்கு பரவியது
லண்டனில் கலவரம் நேற்று மேலும் 3 நகரங்களுக்கும் பரவியது.
லண்டனில் டட்டன்ஹாம் பகுதியில் வசிக்கும் கறுப்பர் இன இளைஞர் போலீஸ் நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட கறுப்பர்கள் போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கலவரமாக மாறியது. கடைகள் சூறையாடப்பட்டன. கட்டிடங்கள், பஸ்கள், போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த கலவரம் தொடர்ந்து நடந்து வருகிறது. தெற்கு லண்டனில் உள்ள குரோய்டான் என்ற இடத்தில் பல கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டன. 100ஆண்டு பழமையான ரீவ்ஸ் பர்னிச்சர் கடையும் தீக்கிரையானது.
இந்த கலவரம் நேற்று மேலும் 3 நகரங்களுக்கும் பரவியது. பர்மிங்ஹாம், பிரிஸ்டால், லிவர்பூல் ஆகிய நகரங்களுக்கும் இந்த கலவரம் பரவியது. இன்று (புதன்கிழமை) முதல் பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் என்ற பகுதியில் இந்தியா இங்கிலாந்து இடையே 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடக்கிறது. அங்கு கலவரம் ஏற்பட்டு உள்ளது. இந்த கலவரம் தொடர்பாக கடந்த 3 நாட்களில் 400 பேர் கைது செய்யப்பட்டனர்.
இங்கிலாந்து பிரதமர் கேமரூன் விடுமுறையில் இத்தாலி சென்று இருந்தார். கலவரம் பரவி வருவதைத் தொடர்ந்து அவர் விடுமுறையை ரத்து செய்து விட்டு நேற்று அவசரமாக நாடு திரும்பினார். லண்டன் வந்து சேர்ந்ததும் அவர் கலவரத்தை அடக்குவதற்கான வழிவகைகளை காண்பதற்காக ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். பிரதமர் பாராளுமன்றத்தையும் கூட்டி இருக்கிறார். பாராளுமன்றத்தில் கலவரம் தொடர்பாக விவாதிக்கப்பட இருக்கிறது.
லண்டனில் ஏற்பட்ட வன்முறை இப்போது 4-வது நாளாக புதிய நகரங்களுக்கும் பரவியுள்ளது. வன்முறைச் சம்பவங்களையடுத்து லண்டனில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். பிரிட்டனின் 3-வது பெரிய நகரமான மான்செஸ்டரில் கடைகளின் மீது இளைஞர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். சில கடைகளில் கொள்ளையடிக்கப்பட்டது. அதை புகைப்படம் எடுத்தவர்களை அவர்கள் விரட்டியடித்தனர். 30 ஆண்டுகளில் மிகவும் மோசமான வன்முறைச் சம்பவம் இது என போலீசார் தெரிவிக்கின்றனர்.
லண்டனில் கலவரம் நேற்று மேலும் 3 நகரங்களுக்கும் பரவியது.
லண்டனில் டட்டன்ஹாம் பகுதியில் வசிக்கும் கறுப்பர் இன இளைஞர் போலீஸ் நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட கறுப்பர்கள் போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கலவரமாக மாறியது. கடைகள் சூறையாடப்பட்டன. கட்டிடங்கள், பஸ்கள், போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த கலவரம் தொடர்ந்து நடந்து வருகிறது. தெற்கு லண்டனில் உள்ள குரோய்டான் என்ற இடத்தில் பல கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டன. 100ஆண்டு பழமையான ரீவ்ஸ் பர்னிச்சர் கடையும் தீக்கிரையானது.
இந்த கலவரம் நேற்று மேலும் 3 நகரங்களுக்கும் பரவியது. பர்மிங்ஹாம், பிரிஸ்டால், லிவர்பூல் ஆகிய நகரங்களுக்கும் இந்த கலவரம் பரவியது. இன்று (புதன்கிழமை) முதல் பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் என்ற பகுதியில் இந்தியா இங்கிலாந்து இடையே 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடக்கிறது. அங்கு கலவரம் ஏற்பட்டு உள்ளது. இந்த கலவரம் தொடர்பாக கடந்த 3 நாட்களில் 400 பேர் கைது செய்யப்பட்டனர்.
இங்கிலாந்து பிரதமர் கேமரூன் விடுமுறையில் இத்தாலி சென்று இருந்தார். கலவரம் பரவி வருவதைத் தொடர்ந்து அவர் விடுமுறையை ரத்து செய்து விட்டு நேற்று அவசரமாக நாடு திரும்பினார். லண்டன் வந்து சேர்ந்ததும் அவர் கலவரத்தை அடக்குவதற்கான வழிவகைகளை காண்பதற்காக ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். பிரதமர் பாராளுமன்றத்தையும் கூட்டி இருக்கிறார். பாராளுமன்றத்தில் கலவரம் தொடர்பாக விவாதிக்கப்பட இருக்கிறது.
லண்டனில் ஏற்பட்ட வன்முறை இப்போது 4-வது நாளாக புதிய நகரங்களுக்கும் பரவியுள்ளது. வன்முறைச் சம்பவங்களையடுத்து லண்டனில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். பிரிட்டனின் 3-வது பெரிய நகரமான மான்செஸ்டரில் கடைகளின் மீது இளைஞர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். சில கடைகளில் கொள்ளையடிக்கப்பட்டது. அதை புகைப்படம் எடுத்தவர்களை அவர்கள் விரட்டியடித்தனர். 30 ஆண்டுகளில் மிகவும் மோசமான வன்முறைச் சம்பவம் இது என போலீசார் தெரிவிக்கின்றனர்.